ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்த வங்கி ஊழியர் தற்கொலை..!
சென்னையில் ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்த வங்கி ஊழியர் தற்கொலை செய்து கொண்டார். விழுப்புரம் மாவட்டம் அதனூரைச் சேர்ந்த குமரேசன் என்ற இளைஞர் சென்னையில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றி வந்தார்.
நண்பர்களுடன் செம்பியம்பாக்கத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்த இவர் ஆன்லைனில் சொல்லப்படுகிறது. ஆன்லைனில் அதிக நேரம் விளையாடி பணத்தை இழந்ததாக சொல்லப்படுகிறது.
மனஅழுத்தத்தில் இருந்த குமரேசன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த காவல்துறையினரும் இளைஞரின் உடலை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.






