தேர்தல் விதிமுறைகளை உடனே அமல்படுத்த வேண்டும்: கிருஷ்ணசாமி வலியுறுத்தல்
தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக, அரசு பணத்தைத் தவறான முறையில் தாரை வார்ப்பதை தேர்தல் ஆணையம் எவ்வாறு அனுமதிக்கிறது? நீதிமன்றங்களும், மத்திய அரசும் இதனை வேடிக்கை பார்த்து கொண்டிருப்பது வேதனைக்குரியது.
ஆட்சி – அதிகாரம், பண பலம், சாதி பலம், அடியாள் பலம் உள்ளிட்ட எந்த அம்சங்களும் மேலோங்கிட தேர்தல் ஆணையம் அனுமதிக்கக் கூடாது. ஜனநாயகப் பூர்வமாக தேர்தலை எதிர்கொள்ளாமல், ஏமாற்று அரசியலில் ஈடுபடும் இந்த திமுக அரசை வன்மையாகக் கண்டிப்பதோடு, தேர்தலையொட்டி இன்னும் திமுகவால் அரங்கேற்றப்பட இருக்கின்ற முறைகேடுகளை தடுத்து, நியாயமான தேர்தலை நடத்திட, உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமலுக்கு கொண்டுவர வேண்டும்.
அனைத்து அரசு நிர்வாகத்தையும் தேர்தல் ஆணையமே நேரடியாக மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசையும், தேர்தல் ஆணையத்தையும் கேட்டுக் கொள்கிறேன்





