திருப்பூர்: நீரில் மூழ்கி மாணவன் பலி
திருப்பூர், கணக்கம்பாளையம், காந்திநகர் பகுதியில் வசித்து வருபவர் மவுதீஸ்வரன்(17). கணக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.
தற்போது பள்ளி விடுமுறை என்பதால், நேற்று பொடாரம்பாளையம் அருகே உள்ள கரைக்குட்டையில் நண்பர்களுடன் குளிக்க சென்றார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற மவுதீஸ்வரன், நீரில் மூழ்கி பலியானார். இது குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.





