சென்னையில் லாரியை முந்த முயன்ற போது விபத்து..!
சென்னை போரூரில் லாரியை முந்தி செல்ல முயன்ற பொழுது நிலை தடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த பெண்ணின் கால்கள் மீது லாரியின் பின் சக்கரம் ஏறியதில் அவர் படுகாயம் அடைந்தார்.
அம்பத்தூரை சேர்ந்த வன்னியராஜ் என்பவர் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பொழுது இந்த விபத்து நேரிட்டது.





