வேலை வாங்கி தருவதாக கூறி 18 லட்ச ரூபாய் மோசடி..!
ஆவடி அருகே வேலை வாங்கி தருவதாக கூறி 18 லட்ச ரூபாய் மோசடி செய்த இருவரை போலீசார் கைது செய்தனர். ஆவடி அருகே எந்த ரெட்டி குப்பத்தை சேர்ந்தவர் ஷர்மிளா.
சென்னை பெரம்பூரை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் ஷர்மிளாவிடம் வேலை வாங்கித் தருவதாக கூறி கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை கொஞ்சம் கொஞ்சமாக 18 லட்சம் ரூபாயை மோசடி செய்துள்ளார்.
மேலும் பணத்தையும் வங்கி கணக்கில் செலுத்த நிர்பந்தித்துள்ளார். பின்னர் தான் ஏமாற்றப்பட்டது அறிந்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து தலைமறைவாக இருந்த இருவரையும் போலீசார் கைது செய்தனர்.





