கால்வாயில் மூழ்கி 8ம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு..!
ஆவடி அருகே கால்வாயில் மூழ்கி உயிரிழந்த பள்ளி மாணவரின் உடலை நீண்ட தேடுதலுக்கு பின் தீயணைப்பு துறையினர் மீட்டனர். அண்ணாநகரை சேர்ந்த த்ரிஷன் என்ற பள்ளி மாணவன் 8ம் வகுப்பு படித்து வந்தான்.
பள்ளி விடுமுறை நாளில் நண்பருடன் வெளியே சென்ற த்ரிஷன் கால்வாயில் குளிக்க சென்ற பொழுது நீரில் மூழ்கி உயிரிழந்தான். தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் தேடுதலுக்கு பின் மாணவனின் உடலை மீட்டனர்.





