மனைவியுடன் தனிமையில் இருந்த நண்பரை கொலை செய்த நபர்..!
புதுச்சேரி மாநிலத்தின் ஏழாம் பிராந்தியத்தில் மனைவியுடன் தகாத உறவில் இருந்த நம்பரை குத்தி கொலை செய்தவர் கைது செய்யப்பட்டார். புதுச்சேரி மாநிலத்தின் ஏனாமில் குருசாம் பேட்டா பகுதியை சேர்ந்தவர் கொல்லட்டி ராம் பாபு. இவரது நண்பர் சங்காடி.
சங்காடியும், ராம்பாவும் மொத்தமாக மீன்களை வாங்கி சில்லறை விற்பனை செய்து வந்தனர். இதனால் அடிக்கடி ராம்பாபு வீட்டிற்கு வந்து செல்வார். அப்போது கொல்லடி மனைவியுடன் சங்காடிக்கு நெருக்கம் ஏற்பட்டு இருவரும் தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 11ஆம் தேதி சங்காடி ராம் பாபுவின் மனைவியுடன் தனிமையில் இருந்துள்ளார். இதை பார்த்து ஆத்திரம் அடைந்த ராம்பாபு கையில் வைத்திருந்த கத்தியால் தனது நண்பர் சங்காடியை கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக குத்தியுள்ளார்.
இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து போனார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.





