மேற்கு வங்க மாநிலத்தில் கரை ஒதுங்கிய 36 அடி ராட்சத திமிங்கலம்..!
மேற்கு வங்க மாநிலம் கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தில் மந்தார மணி கடல் பகுதியில் சுமார் 30 அடி நீளம் கொண்ட ராட்சத திமிங்கலம் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது அதன் உடலில் பல காயங்கள் காணப்பட்டன. தகவல் அறிந்த காவல்துறையினரும் வனத்துறையினரும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.
பொதுவாக ஆழ்கடல் பகுதிகளில் வசிக்கும் திமிங்கலங்கள் திசைமாறி கடலோரம் வரும் போது உயிரிழந்துவிடும் என்றும் இந்த பகுதியில் முன்பு இதே போன்று சில திமிங்கலங்கள் கரை ஒதுங்கியதால் அதிகாரிகள் தெரிவித்தனர்.






