திருப்பூர், திருமுருகன்பூண்டி காமாட்சியம்மனுக்கு வளைகாப்பு சீர்வரிசை செய்து ஊர்வலம்!
திருப்பூர், திருமுருகன்பூண்டி காமாட்சியம்மன் நெசவாளர் காலனியில் உள்ள செல்வ விநாயகர், பாலமுருகன், ஸ்ரீ காமாட்சியம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஸ்ரீ காமாட்சியம்மனுக்கு வளைகாப்பு, சீர்வரிசை செய்து ஊர்வலமாக சென்று வந்தது.

காமாட்சியம்மன் கோவில் நிர்வாக கமிட்டி மற்றும் பெளனர்மி மகளிர் மன்றம் சார்பில் அபிசேக அலங்கார பூஜை நடந்தது. மேலும் குழந்தை இல்லாதவர்களுக்கு வளைகாப்பு பூஜையும் நடந்தது. பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




