தமிழக வெற்றி கழக கொடி கம்பம்..உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு..!

மிழக வெற்றிக்கழக கட்சி கொடி கம்பம் அமைக்க அனுமதி கோரிய விண்ணப்பம் மீது ஆறு வாரங்களில் முடிவெடுக்க சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

அமைந்தகரை திருவீதி அம்மன் கோயில் தெருவில் தமிழக வெற்றி கழக கொடி கம்பம் அமைக்க அனுமதி அளிக்க சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட கோரி தமிழக கட்சி கழகம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

 

அந்த தெருவில் மற்ற கொடிக்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக வெற்றிக்கழக கொடி கம்பம் அமைக்க அதிகாரிகள் ஆட்சேபம் தெரிவித்து வருவதாகவும், மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

 

இந்த மனுவை நீதிபதி சத்யநாராயண பிரசாத் விசாரித்து இரண்டு வாரங்களில் மாநகராட்சியிடம் புதிதாக மனு அளிக்க மனுதாரருக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த விண்ணப்பத்தின் மீது ஆறு வாரங்களில் முடிவெடுக்க மாநகராட்சிக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.