--- --:--:-- --

கடன் தொல்லையால் கணவன் தற்கொலை.. துக்கம் தாங்காமல் மனைவியும் தற்கொலை..!

10

வேதாரண்யம் அருகே கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட துக்கம் தாங்காமல் மனைவியும் மின்கம்பியை பிடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுவது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

குமரேசன் – புவனேஸ்வரி தம்பதிக்கு திருமணம் நடந்து இரண்டு ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை என கூறப்படுகிறது. குமரேசன் கடன் தொல்லையால் கடும் மன உளைச்சலில் இருந்த நிலையில் இன்று காலை வீட்டின் மின் கம்பியை பிடித்த தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது.

 

 

சத்தம் கேட்டு மனைவியும் பெற்றோரும் மாடிக்கு ஓடி சென்ற பொழுது கணவர் இறந்து கிடப்பதை பார்த்து புவனேஸ்வரியும் உயரழுத்த மின்கம்பியை பிடித்து தற்கொலை செய்து கொண்டதாக குமரேசனின் பெற்றோர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon