வேலைக்கு விண்ணப்பித்த நபர் லிங்க் தொட்டதால் லட்சக்கணக்கில் பணம் மோசடி..!
instagram மூலம் வேலைக்கு விண்ணப்பித்த டெல்லியை சேர்ந்த ஒரு நபர் தினமும் வீட்டிலிருந்து வேலை செய்து பெரும் பணம் சம்பாதிப்பது எப்படி என்று ஒரு லிங்கை கிளிக் செய்ததால் 9 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் பணத்தை இழந்தார்.
இந்த வழக்கில் இரண்டு பேரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். முதலீடு செய்த தொகையில் 30 சதவீதம் வருமானம் தருவதாக ஆன்லைன் மூலம் மோசடி நடைபெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சுமார் 9 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்துவிட்டு பணத்தை எடுக்க முடியாததால் காவல்துறையிடம் புகார் அளித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





