ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 65 வயது மூதாட்டியை மீட்ட இளைஞர்கள்..!
கேரளாவின் கொல்லத்தில் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 65 வயது மூதாட்டியை இளைஞர்கள் துணிச்சலுடன் செயல்பட்டு கயிறு கட்டி மீட்கும் காட்சி வெளியாகியுள்ளது.
குளத்துப்புழா பகுதியில் உள்ள ஆற்றில் 65 வயதுடைய மூதாட்டி தனது உறவினருடன் துணி துவைக்க சென்றபொழுது கரைபுரண்டு ஓடும் நீரில் தவறி விழுந்த மூதாட்டி அங்கிருந்த கல்லை பற்றிக் கொண்டிருந்த நிலையில் அவரது கூச்சலை கேட்டு அந்த பகுதிக்கு வந்த இளைஞர்கள் ஆற்றில் இறங்கி பத்திரமாக மீட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





