தேசிய நெடுஞ்சாலையில் பாறைகள் சரிந்து விழுந்ததால் பரபரப்பு..!
உத்தரகண்ட் மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலையில் பாறைகள் சரிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ரிஷிகேஷ் ஸ்ரீநகர் இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது பெரிய பாறைகள் சரிந்து சாலையில் விழுந்தன.
நல்வாய்ப்பாக சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் உயிர் தப்பினார். அந்த பகுதியில் போக்குவரத்து தடைபட்டது. வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.






