ஓடும் ரயிலில் ஏற முயன்று தடுமாறி விழுந்த பெண்..! காப்பாற்றிய ஆர்.பி.எப்.கான்ஸ்டபிள்..!
செகந்திராபாத் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்று தடுமாறி தண்டவாளத்தில் விழப்போன பெண்மணியை ஆர்பிஎஃப் கான்ஸ்டபிள் ஒருவர் உடனடியாக விரைந்து ஓடிச் சென்று காப்பாற்றும் காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
நசீமா பேகம் என்ற அந்த பெண்மணி ரயில் நகரத் துவங்கிய பின் அதில் ஏற முயன்றார். அப்போது நிலை தடுமாறி ரயில் தண்டவாளத்திற்கு இடையே உள்ள இடைவெளியில் அவர் விழுந்தார். அப்போது அங்கு நடந்து சென்று ஆர்பிஎஃப் கான்ஸ்டபிள் ஓடிச்சென்று அவரை காப்பாற்றினார்.






