குடி பழக்கத்தை நிறுத்தி ஓராண்டு காலமானதாகக் கூறும் சிம்பு..!
தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிம்பு தற்போது இவரது நடிப்பில் உருவாகி வரும் மாநாடு படத்தை வெங்கட்பிரபு இயக்கியுள்ளார் .இந்த படத்தின் படப்பிடிப்பு தயாராகி வருகிறது. மாநாடு படக்குழுவினர்கள் கிளப் ஹவுஸில் கலந்துரையாடினர்.
அப்போது பேசிய சிம்பு தான் குடி பழக்கத்தை நிறுத்தி ஓராண்டு காலமானதாகக் கூறினார். பிரேம்ஜி போன்றோருடன் இருந்தும் கூட குடிக்காமல் இருப்பது மிகப் பெரிய விஷயம் என நகைச்சுவையாக பேசினார்.






