--- --:--:-- --

சேலத்தில் வீட்டிற்குள் அனுமதியின்றி நுழைந்து குளியலறையில் பூட்டி கொண்ட வெளிமாநில இளைஞர்!

9

சேலத்தில் வீட்டிற்குள் நுழைந்த வெளிமாநில இளைஞர் ஒருவரை அப்பகுதி மக்கள் கட்டி வைத்து அடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். தாதகாப்பட்டி யை சேர்ந்த சரஸ்வதி என்பவர் வீட்டிற்குள் புகுந்த வெளிமாநில இளைஞர் ஒருவர் சமைத்து வைத்திருந்த உணவை சாப்பிட்டார்.

 

இதனால் வீட்டில் இருந்த பெண்கள் அதிர்ச்சி அடைந்து அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்தனர். அவர்களைப் பார்த்தவுடன் அந்த இளைஞர் பயத்தில் குளியலறைக்கு சென்று பூட்டிக் கொண்டார். இதனையடுத்து அப்பகுதி மக்கள் கதவை உடைத்து அவரை வெளியே கொண்டுவந்து கட்டி வைத்து அடித்துள்ளனர்.

 

பின்னர் அன்னதானபட்டி போலீசாரிடம் அந்த இளைஞர் ஒப்படைக்கப்பட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon