கர்நாடகாவில் நடந்த பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு கீழே விழுந்து உயிரிழந்த வீடியோ வெளியாகியுள்ளது. கர்நாடகாவில் உள்ள மேல்நிலைப் பள்ளியின் ஆண்டு விழாவையொட்டி மாணவிகள் சிலர் ஆடிட்டோரியத்தில் நடன ஒத்திகையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது ஒத்திகையில் ஈடுபட்டிருந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி பூஜிதா திடீரென மயங்கி விழுந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மாணவி மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் நடைபெற்ற போது மயங்கி விழுந்த மாணவியை உடனடியாக சக மாணவிகள் எழுப்ப முயன்றபோது அங்கிருந்த பள்ளி ஆசிரியர் ஒருவர் தனது இருக்கையில் பதற்றமின்றி அமர்ந்திருந்தது வீடியோவில் பதிவாகியுள்ளது.
மேலும் செய்திகள் :
திருவாடானை அருகே கோவிலில் லட்சார்ச்னை! ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்!
மின்சாரம் தாக்கி டைல்ஸ் தொழிலாளி பலி.. போலீஸ் விசாரணை..!
வார விடுமுறை.. நாளை முதல் சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு..!
ஸ்டாலின் சமரசம்.. நோட்டீஸை வாபஸ் பெற தயாநிதி முடிவு..!
செயின் பறிப்பு வழக்கில் 2 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை..!
ஜூலை 16ல் திருவண்ணாமலையில் அதிமுக ஆர்ப்பாட்டம்..!