விபத்தில் காயமடைந்த பாலிவுட் நடிகையான ஷபானா ஆஸ்மி விரைவில் குணமடைய இறைவனிடம் வேண்டிக் கொள்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து புனேவிற்கு நடிகை ஷபானா ஆஸ்மி காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது காகல்பூர் என்ற இடத்தில் முன்னால் சென்ற லாரியின் மீது கார் மோதி விபத்திற்குள்ளானது. உடனே அவர் மீட்கப்பட்டு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்தை ஏற்படுத்தியதாக கார் ஓட்டுநர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தற்போது ஷபானா ஆஸ்மியின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகள் :
ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க கனடா சென்றார் பிரதமர் மோடி..!
அருவியில் குளித்தவர்களை அலறவிட்ட பாம்பு..!
துளி கூட மேக்கப் போடாமல் இருக்கும் நடிகை மிருணாள் தாகூர்..!
விவாகரத்துக்கு பின் மீண்டும் திரையில் ஒன்று சேரும் சமந்தா - நாக சைதன்யா..!
திருமண பெயரில் பல லட்சங்கள் ஏமாற்றிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை..!
புனே அருகே பாலம் இடிந்து விபத்து..4 பேர் மரணம்..!