வாக்குச்சாவடிக்குள் வந்து வாக்கு சேகரித்த நபரை கண்டித்து தர்ணாவில் ஈடுபட்ட பெண்

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே வாக்குச்சாவடிக்குள் வந்து வேட்பாளர் ஒருவர் வாக்கு சேகரிக்க தாக கூறி பெண் வேட்பாளர் ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். முஷாகா கல்யாணபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வேட்பாளர் ஒருவர் வாக்குச்சாவடிக்குள் சென்று வாக்கு சேகரித்ததாக கூறி மற்ற வேட்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

 

வேட்பாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பர்கானா என்ற பெண் வாக்குச்சாவடி முன் தர்ணாவில் ஈடுபட்டார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் இரண்டு தரப்பையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.


Leave a Reply