ரஜினியிடம் யார் ஆதரவு கேட்டது?

உள்ளாட்சி தேர்தலுக்கு யாருக்கும் ஆதரவு இல்லை என நடிகர் ரஜினி அறிவித்திருந்த நிலையில், அவரிடம் யார் ஆதரவு கேட்டார்கள் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கேள்வி எழுப்பியிருக்கிறார். சிவகாசியில் தனியார் உடற்பயிற்சி நிலையத்தை திறந்து வைத்தபின் சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

 

அப்போது நடிகர்கள் அரசியலுக்கு வருவதை விமர்சிக்கும் சீமான் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது, இதற்கு பதிலளித்த சரத்குமார் நடிகர்கள் மட்டுமல்ல அனைவருக்கும் அரசியலுக்கு வர வேண்டும் என்பதே தமது விருப்பம் என கூறினார்.


Leave a Reply