கும்மிடிப்பூண்டியில் 2 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளுக்கு ஒரு கிலோ அரிசி வழங்கி பசுமைத்தாயகம் அமைப்பினர் வாகன பிரச்சாரத்தின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 2 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு ஒரு கிலோ அரிசி வழங்கும் முகாமினை பசுமைத்தாயகம் மாநில துணை செயலாளர் பத்மநாபன் தலைமையில், பாமக மாநில துணை தலைவர் செல்வராஜ் துவக்கி வைத்தார்.
இதில் ஏராளமான பொதுமக்கள் பிளாஸ்டிக் கழிவுகளை கொடுத்து அரிசியை வாங்கிக் கொண்டனர். மேலும் கும்மிடிப்பூண்டி பகுதி முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் வகையில் பசுமை தாயகம் மற்றும் பாமக சார்பில் வாகன பிரச்சாரம் நடத்தப்பட்டு பலரிடமிருந்து பிளாஸ்டிக் கழிவுகளை பெற்று அதற்கு பதிலாக அரிசி வழங்கப்பட்டது.
மேலும் செய்திகள் :
திருப்பூர்: நீரில் மூழ்கி மாணவன் பலி
மணப்பாறை அருகே சத்துணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, பேதி..!
கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2 பள்ளிகள் திறப்பு..!
அதிமுக எம்எல்ஏக்களுக்கு எடப்பாடி பழனிசாமி விருந்து.. செங்கோட்டையன் புறக்கணிப்பு..!
பள்ளிகள் திறப்பு தேதி அறிவிப்பு..!
ஏப்.30 வரை ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும்