கீழடியில் ஆறாம் கட்ட அகழாய்வு விரிவான முறையில் நடைபெறும் என மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு கீழடி ஆய்வு குறித்த ஒளிப்படக் கண்காட்சி நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் கீழடியில் ஐந்தாவது கட்ட அகழாய்வு சிறப்பாக நடைபெற்றதை தொடர்ந்து ஆறாவது கட்ட ஆய்வுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக கூறினார். ஜனவரி மாதம் முதல் அடுத்த கட்ட ஆய்வு நடைபெறும் என்றும் இதன்மூலம் புதிய ஆதாரங்கள் கிடைக்கும் என்றும் அமர்நாத் ராமகிருஷ்ணன் குறிப்பிட்டார்.
மேலும் செய்திகள் :
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு..!
அர்ச்சகர்களுக்கான ஊக்கத் தொகை ரூ.1,500 ஆக உயர்வு..!
தனியார் பள்ளிகளுக்கு 52 நாள்கள் விடுமுறை..!
வருங்கால முதல்வரே.. நயினார் நாகேந்திரனுக்கு போஸ்டர்..!
பில்ட் இன்டெக் கண்காட்சி கோவை கொடிசியாவில் ஏப்ரல் 20-ல் தொடக்கம்!
கருணாநிதி நினைவிடத்தில் கோபுர அலங்காரம் - எதிர்க்கட்சிகள் கண்டனங்கள்