சுர்ஜித் விழுந்த இடத்தில் கோவில் கட்டுவதே எனது ஆசை..!

திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்த குழந்தையின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை 3 மணி அளவில் வீட்டின் அருகே ஆழ்துளைக் கிணற்றுக்குள் குழந்தை சுர்ஜித் விழுந்ததையடுத்து குழந்தையை மீட்கும் முயற்சி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.

 

இந்த நிலையில் ஐந்தாம் நாள் மீட்பு பணியின் போது குழந்தை விழுந்த ஆழ்துளை கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீச தொடங்கியது. இதையடுத்து குழந்தை உயிர் இழந்து விட்டதை உணர்ந்து அது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

 

இதையடுத்து கல்லறை தோட்டத்தில் குழி தோண்டப்பட்டு அங்கு குழந்தையின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதனிடையே குழந்தை சுர்ஜித் விழுந்த ஆழ்துளை கிணறும் அதனருகே மீட்புக்காக தோண்டப்பட்ட கிணறும் உடனடியாக மூடப்பட்டன.

 

குழந்தை சுர்ஜித் விழுந்த குழியில் ஒரு கோயில் கட்டவதே தனது ஆசை என அவரது தாயார் கலாமேரி கண்ணீருடன் கூறியுள்ளார். தன் குழந்தைக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் சுர்ஜித்தின் தந்தை நன்றி தெரிவித்துள்ளார்.


Leave a Reply