ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா, திருவாடானை அருகே அரும்பூர் ஊராட்சியில் உள்ள ஏழூர் கிராமத்தில் உள்ள குளம் மற்றும் கண்மாய் கரையில் நேசம் அறக்கட்டளையின் சார்பாக சுமார் 2000 பனை விதைகள் நடப்பட்டது. இந்நிகழ்வில் நேசம் அறக்கட்டளையின் தலைவர் கோட்டைச்சாமி, ஊராட்சி செயலர் மகேஸ்வரி, களப்பணியாளர் மகேஸ்வரி உள்ளிட்ட பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பனை விதைகளை நட்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்கள் .

வரும் காலங்களில் நேசம் அறக்கட்டளை மற்றும் திருவாடானை தோட்டக்கலையும் இனைந்து இந்த ஆண்டில் 1 லட்சம் மரக்கன்று மற்றும் பனை விதைகளை நடுவதென இலக்கை நோக்கி செயல்படுத்தி வருகின்றோம் என்று கூறப்பட்டது.
மேலும் செய்திகள் :
தேர்தல் பாதுகாப்பு: திருவாடானையில் மத்திய பாதுகாப்புப் படையினரின் அதிரடி கொடி அணிவகுப்பு!
சட்டமன்ற தேர்தல் எதிரொலி - தீவிர பாதுகாப்பு பணியில் போலீசார்
நெருக்கடி கொடுப்பது பா.ஜ.க-வின் பழக்கம் - த.வெ.க நிர்வாகி நாஞ்சில் சம்பத் ஓபன் டாக்
தி.மு.க சொன்ன தொகுதி எண்ணிக்கையில் ஏற்பு இல்லை - பெ.சண்முகம் பேட்டி
த.வெ.க ஆதரவு வாபஸ் - ஜனநாயக முஸ்லீம் மக்கள் கட்சி அதிரடி
அ.தி.மு.கவுக்காக நீங்க ஏன் நீலிக்கண்ணீர் வடிக்கிறீங்க? ஸ்டாலினை தாக்கிய அண்ணாமலை






