கோவையில் விவசாயி ஒருவர் தாம் வீட்டில் சேமித்து வைத்திருந்த 50 ஆயிரம் ரூபாய் பணத்தை எலி கடித்து சேதப்படுத்திய சம்பவம் அவரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கோவை வெள்ளியங்காடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ரங்கராஜ் என்பவர் அறுவடைக்கு பின் கிடைத்த 50 ஆயிரம் ரூபாய் பணத்தை தனது வீட்டில் சேமித்து வைத்திருந்தார். அந்த பணத்தை எலி கடித்து குதறி சின்னாபின்னமாக்கியதை கண்ட அவர் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்.