புதிய லேண்டர் உருவாகும் பணி தீவிரம் : மயில்சாமி அண்ணாதுரை

விக்ரம் லேண்டரை விட மேம்பட்ட புதிய லாண்டரி உருவாக்கி விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக முன்னாள் இஸ்ரோ தலைவர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு வேதநாராயண புறத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் பிறந்த நாளையொட்டி உலக மாணவர்கள் தின விழா நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் இஸ்ரோ தலைவர் மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் நாசாவுக்கு நிகராக இஸ்ரோ செயல்பட்டு வருவதாகவும் கூறினார்.


Leave a Reply