இடி மின்னல் தாக்கி உயிரிழந்த 6 பேர் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிதி உதவி

தமிழகத்தில் ஒரே நாளில் இடி மின்னல் தாக்கி உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. தலா 4 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக அனைத்து மாவட்டங்களுக்கும் உதவிகள் கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

புதுக்கோட்டை மாவட்டம் காட்டூர் கிராமத்தில் நேற்று தாக்கியதில் உயிரிழந்த சாயதி விஜயா கலைச்செல்வி லட்சுமி அம்மாள் ஆகியோரின் 4 பேரின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேபோல் மின்னல் தாக்கி உயிரிழந்த பெரம்பலூர் மாவட்டம் பாலசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் வேலுவின் குடும்பத்திற்கு 4 லட்சம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்பட உள்ளது.

 

காஞ்சிபுரம் மாவட்டம் நசரத்பேட்டை சேர்ந்த கோபி ஆகியோரின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரண மாக அளிக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.


Leave a Reply