ப.சிதம்பரத்தை கைது செய்தது அமலாக்கத்துறை

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக திகார் சிறையில் உள்ள முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் அமலாக்கத் துறை கைது செய்துள்ளது. சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்யவும் தேவைப்பட்டால் அவரை கைது செய்யவும் தடை இல்லை என டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய்குமார் நேற்று தனது உத்தரவில் தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் ஐந்து பேர் இன்று காலை எட்டு முப்பது மணிக்கு திகார் சிறைக்கு சென்றனர் அங்கு பாசத்துடன் தொடர்ச்சியாக மூன்று அதிகாரிகள் சுமார் இரண்டு மணி நேரம் விசாரணை நடத்தினர் இந்த விசாரணையின்போது ப சிதம்பரம் போதிய ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றும் அதனால் அவரை கைது செய்து விசாரித்தால் மட்டுமே அடுத்த கட்டத்திற்கு இந்த வழக்கை கொண்டு செய்ய முடியும் என்றும் அமலாக்கத்துறை தரப்பில் கூறப்படுகிறது.

 

இந்நிலையில் விசாரணையின் முடிவில் சிதம்பரத்தை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தனியாக மனு தாக்கல் செய்யவும் அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. முன்னதாக முன்னாள் நிதியமைச்சர் பா சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி கைது செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து அவர் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.


Leave a Reply