ஆம்புலன்ஸிலிருந்து செல்போன் திருடும் சிறுவனின் சி‌சி‌டி‌வி காட்சி

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் ஆம்புலன்சில் இருந்த சிறுவன் ஒருவன் செல்போன் திருடன் சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகின்றன. விபத்தில் காயமடைந்த ஒருவரை தனியார் ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர் ஒருவர் குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார்.

 

அப்போது வாகனத்திலேயே செல்போனை வைத்து விட்டு மருத்துவமனைக்கு அவர் சென்ற நிலையில் அவரது செல்போன் திருடப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை பார்த்தபோது சிறுவன் ஒருவன் செல்போன் திட்டுவது போன்ற காட்சிகள் அதில் பதிவாகியிருந்தன. அந்த சிறுவன் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Leave a Reply