8,9,10 ம் வகுப்புகள் கணினி மயமாக்கப்படும்
தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கான அங்கீகாரம் இனி 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 320 மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு அங்கீகாரம் ஆணையை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்.
விழாவில் பேசிய அவர் மெட்ரிகுலேஷன் பள்ளி கட்டடங்கள் பொதுப்பணித்துறை ஆய்வு செய்யப்படும் என்று 70 லட்சம் மாணவர்களை சிறந்த மாணவர்களாக உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். வரும் கல்வியாண்டு முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் என குறிப்பிட்ட அமைச்சர் செங்கோட்டையன் 8, 9, 10 ம் வகுப்புகள் கணினி மயமாக்கப்படும் என்றார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




