மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்க எடப்பாடி பழனிசாமி உத்தரவு!

மேட்டூர் அணையிலிருந்து புள்ளம்பாடி மற்றும் புதிய கட்டளை மேட்டு கால்வாய்களின் பாசனத்திற்கு நீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தஞ்சை மற்றும் அரியலூர் மாவட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று புள்ளம்பாடி மற்றும் புதிய கட்டளை மேட்டு கால்வாய் நாளை முதல் 137 நாட்களுக்கு நீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன் மூலம், திருச்சி, தஞ்சை மற்றும் அரியலூர் மாவட்டங்களில் 42 ஆயிரத்து 736 நிலங்கள் பாசன வசதி பெறும் என்று தெரிவித்துள்ளனர். விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி உயர் மகசூல் பெறுமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.


Leave a Reply