நீதிமன்றங்களில் காலி இடங்களை நிரப்ப வேண்டும்

நாடு முழுவதும் உள்ள, 24 உயர் நீதிமன்றங்கள் மற்றும், 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள நீதிமன்றங்களில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதே, தற்போது மிகவும் முக்கிய பிரச்னை என, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு கூறியுள்ளது.

 

இது தொடர்பான வழக்கில், நீதிமன்றங்களில் உள்ள காலி இடங்களை நிரப்புவது குறித்து, இந்த அமர்வு ஆய்வு செய்கிறது. காலி பணியிடங்கள் குறித்த முழு விபரங்களை தாக்கல் செய்யும்படி, அனைத்து நீதிமன்றங்களுக்கும், உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.


Leave a Reply