நீட் போன்ற தேர்வுகளால் அரசு பள்ளி மாணவர்களின் வாய்ப்புகள் பறிக்கப்படுகின்றன என்று நடிகர் சூர்யா கருத்து தெரிவித்து உள்ளார். சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 40 ஆம் ஆண்டு விழா சென்னை வடபழனியில் நடைபெற்றது. அப்போது பேசிய நடிகர் சிவக்குமார் உடலின் ஆரோக்கியத்தை பேணிகாக்க யோகா செய்வது அவசியம் என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். அவரை தொடர்ந்து பேசிய சூர்யா நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளால் சமநிலை பாதிக்கப்படுவதாகவும் , அரசு பள்ளி மாணவர்களின் வாய்ப்புகள் மறுக்கப்படுவதாகவும் வேதனையுடன் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி மற்றும் கல்வியாளர்கள் மாடசாமி மற்றும் வசந்தி தேவி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள்.
மேலும் செய்திகள் :
தி.மு.க வேட்பாளர்கள் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்
சாதாரண எளிய தொண்டருக்கு காங்கிரஸ் கட்சி வாய்ப்பு வழங்கியுள்ளது - செல்வப்பெருந்தகை
காங்கிரஸ் போராடி தான் ராஜ்ய சபா வாங்கியுள்ளது - நயினார் நாகேந்திரன்
என் செயல்பாடு எப்படி இருக்கும்னு பொறுத்திருந்து பாருங்க: கிறிஸ்டோபர் திலக்
கூட்டணி கட்சிகளை அழிக்கும் பாஜக: தேஜஸ்வி
நாங்குநேரி போல் மானாமதுரையில் அதிர்ச்சி சம்பவம்..!






