சென்னை அருகே உள்ள பொழுது போக்கு பூங்காவில் ராட்டினம் அறுந்து விழுந்ததால் தற்காலகமாக பூங்காவை மூட காவல் துறை உத்தரவிட்டுள்ளது. பூந்தமல்லி அடுத்துள்ள கிராமத்தில் குயின்ஸ்டன் எனும் தனியார் பொழுதுப்போக்கு பூங்கா உள்ளது.அங்குள்ள ராட்டினத்தில் இரும்பு கம்பிகள் அறுந்து கீழே விழுந்தன.
கீழே இறங்கும் போது ராட்டினத்தின் கம்பிகள் அறுந்து விழுந்ததால் லேசான காயங்களுடன் அதில் பயணித்த பயணிகள் உயிர் தப்பினர்.இந்நிலையில் அந்த பொழுதுபோக்கு மைதானத்தை மூட காவல் துறை உத்தரவு பிறப்பித்து உள்ளது.