தண்ணீர் பிரச்சனையின் விபரீதம் உணராமல் அரசு செயல்படுகிறது-வைகோ

தண்ணீர் பிரச்சனையின் விபரீதம் உணராமல் அரசு செயல்பட்டு கொண்டிருப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். தேச துரோக வழக்கு தொடர்பான விசாரணைக்காக சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் அவர் ஆஜரானார்.

 

தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சனை தொடர்பாக வைகோ கூறியதாவது: நிலைமை மிக மோசமாகி கொண்டிருப்பதாகவும், கடந்த 10 மாத காலமாக இருந்ததின் ஒட்டு மொத்த விளைவு இன்றைக்கும் குடிநீரும் இல்லை, குடிப்பதற்கும் தண்ணீர் இல்லை, போர்க்கால நடவடிக்கை என வாய் அளவில் சொல்லி பயனில்லை, உண்மையிலே அதற்கான முடிவு எடுக்காவிட்டால் கோடிக்கணக்கான மக்கள் வாழ முடியாத நிலை ஏற்படும் என கூறினார்.


Leave a Reply