திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தமிழக பக்தர்களை அம்மாநில காவல் துறை தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டை சேர்ந்த ஒரு குடும்பத்தினரின் திருமண விழா திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெற்றது.
அதில் பங்கேற்பதற்காக சென்னை மற்றும் செங்கல்பட்டை சேர்ந்த 42 பேர் திருப்பதி சென்றனர். சோதனை சாவடியில் நடந்த சோதனையில் அவர்கள் கொண்டு சென்ற பையில் புகையிலை பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. இதனால் அவர்களை காவல் துறை தாக்கியுள்ளனர்.