சேலம் மாவட்டத்தில் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் கண்டிப்பாக தலைக்கவசம் அணிந்து செல்லும்படி திருமணம் செய்த கையோடு புதுமண தம்பதியினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தமிழகம் முழுவதும் இரு சக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிந்து செல்லும்படி காவல் துறையினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சேலத்தை சேர்ந்த புதுமண தம்பதிக்கு கீர்த்திராஜ், மற்றும் தனஷ்ரேயா ஆகியோர் தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக திருமணம் முடிந்த கையோடு நெத்திமெட்டில் உள்ள திருமண மண்டபத்திலிருந்து சீலநாயக்கன்பட்டி வீடு நோக்கி இருவரும் தலைக்கவசம் அணிந்தபடி சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். புதுமணத்தம்பதியின் இந்த முயர்ச்சிக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள் :
அஜித் குமாருக்கு பிரம்மாண்ட காரை பரிசாக அளித்த மஹிந்திரா நிறுவனம்..!
நன்றி மறந்தவர் எடப்பாடி பழனிசாமி - ஓபிஎஸ்
தலைமைத் தேர்தல் ஆணையருக்கு நெருக்கடி: பதவி நீக்கத் தீர்மானத்தில் 193 எம்.பி.க்கள் கையெழுத்து
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு - தி.மு.க கூட்டணி மார்ச் 15-ல் ஆர்ப்பாட்டம்
தி.மு.க கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு - ஒப்பந்தம் கையெழுத்து
தி.மு.க கூட்டணிக்கு பெங்களூரு புகழேந்தி ஆதரவு..!






