ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி – டாஸ் வென்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சு

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி, முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளார்.

 

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், 2வது தகுதிச்சுற்று போட்டி விசாகப்பட்டினத்தில் சற்று நேரத்தில் தொடங்குகிறது. இதில் வெற்றி பெறும் அணி, இறுதிப் போட்டியில் மும்பை அணியை எதிர்கொள்ளும்.

 

இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். விசாகப்பட்டினத்தில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார்


Leave a Reply