தனது கருத்து திரித்து கூறப்பட்டுள்ளது – நடிகர் விஜய் சேதுபதி ஆதங்கம்

பிரபல நகை கடையான ஜோயாலுக்காஸ் நிறுவனத்தின் 160 வது ஷோரூம் கோவை காந்திபுரம் நூறடி சாலையில் திறக்கப்பட்டது.

 

திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் விஜய் சேதுபதி கூடியிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றினார்.பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர்,அடுத்ததாக மே 15 ம் தேதி தான் நடித்துள்ள சிந்துபாத் படம் வெளியாக உள்ளது எனவும் அனைத்து விதமான படங்களிலும் தான் நடித்து வருவதாகவும் கூறினார்.மேலும் அனைவரை போலவே தானும் தேர்தல் முடிவை எதிர்நோக்கி காத்திருப்பதாகவும் மதுரையில் நேற்றைய தினம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது ஆட்சி மாற்றம் வர வேண்டும் என தான் குறிப்பிடவில்லை எனவும்,தனது கருத்து திரித்து கூறப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.


Leave a Reply