பொய் கூறுபவர் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி..!
உலகமே கவனித்துக் கொண்டிருக்கும் போதே பொய் கூறுபவர்கள் எப்படி மக்களுக்கு சேவை செய்ய முடியும் என பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ் கட்சி குறித்து கேள்வி எழுப்பினார். சமீபத்தில் புதுச்சேரி சென்ற காங்கிரஸ் கட்சியிaன் எம்எல்ஏ ராகுல் காந்தி சோலை நகர் மீனவ கிராமத்தில் உரையாடியுள்ளார்.
அப்போது பேசிய பெண் ஒருவர் மழை புயலின் போது பாதிக்கப்பட்ட தங்களை புதுச்சேரி முதலமைச்சர் ஆன நாராயணசாமி சந்தித்து நிவாரணம் வழங்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.
அதனை ஆங்கிலத்தில் ராகுலுக்கு விளக்கிய நாராயணசாமி புயலின் போது தான் பார்வையிட்டு சென்றதை அந்த பெண் கூறுவதாக தவறாக மொழி பெயர்த்தார். கடும் விமர்சனத்திற்கு உள்ளான இந்த நிகழ்வை சுட்டிக்காட்டிப் பேசிய பிரதமர் நரேந்திரமோடி சொந்த கட்சி தலைவரிடமே நாராயணசாமி பேசியதாக விமர்சித்தார்.





