--- --:--:-- --

திருப்பூர்: தனி நபராக வாகன சோதனையில் ஈடுபட்ட காவலர் பணியிடை நீக்கம்

திருப்பூர் பல்லடம் சாலையில் தனியாக வாகன சோதனையில் ஈடுபட்ட ஆயுதப்படை காவலர் ராதாகிருஷ்ணனை பொதுமக்கள் ஹெல்மெட் அணியவில்லை என்றும் வாகன பதிவு எண் இல்லாத வாகனத்தை இயக்குவதாகவும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த காட்சிகள் சமூக வளைதளங்களில் வைரலாக பரவியதையடுத்து தனி நபராக அத்துமீறி வாகன சோதனையில் ஈடுபட்ட ஆயுதப்படை காவலர் ராதகிருஷ்ணனை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கயல்விழி உத்தரவிட்டார்.

Leave a Reply

Right Menu Icon