--- --:--:-- --

70-க்கும் மேற்பட்ட ஆண்களை வைத்து மனைவிக்கு பாலியல் வன்கொடுமை..!

3

பிரான்சில் மனைவியை ஏராளமான ஆண்களை வைத்து பாலியல் வன்கொடுமை செய்ய வைத்த நபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 72 வயதான நபர் தனது மனைவியை பெரும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளார்.

 

பல்வேறு நேரங்களில் வீட்டிற்குள் செல்ல 70-க்கும் மேற்பட்ட ஆண்களை அனுமதித்து தனது மனைவியை பாலியல் வன்கொடுமை செய்ய வைத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது தொடர்பான வழக்கை விசாரித்து வந்த ஏவிகே நீதிமன்றம் வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளது.

 

தவறை ஒப்புக்கொண்டு குடும்பத்திடம் மன்னிப்பு கேட்டுக் கேட்டுக் கொண்ட அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

Right Menu Icon