பாலத்தின் தடுப்பு கட்டையில் பைக் ஓட்டிய இளைஞர் கைது..!
திருச்சியில் கொள்ளிடம் தடுப்பு கட்டிட இருசக்கர வாகனத்தை ஓட்டிய இளைஞர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மண்ணச்சநல்லூர் அருகே பூனா பாளையத்தை சேர்ந்த இளைஞர்கள் கடந்த 23ஆம் தேதி திருவிழாவிற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.
அப்பொழுது அதில் ஒரு இளைஞர் பாலத்தின் தடுப்பு சுவரில் நின்ற இருசக்கர வாகனம் ஒட்டி சாகசம் செய்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்ததில் தவறு மூர்த்தி என்பது தெரிய வந்தது.
இதனையடுத்து 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய முற்பட்ட பொழுது தப்பி ஓடினார்.





