சூரியனின் முதற்கதிர்களை வணங்கி புத்தாண்டை வரவேற்ற பழங்குடியினர்..!
பொலிவியாவில் உள்ள பழங்குடியின மக்கள் அதிகாலையில் எழுந்து சூரியனை வணங்கி தங்கள் புத்தாண்டை வரவேற்றனர். நள்ளிரவில் ஓர் இடத்தில் குவிந்த நூற்றுக்கணக்கான பழங்குடியின மக்கள் தங்கள் முன்பு தீ மூட்டி சூரியனின் முதல் கதிர்களை வழிபட்டனர்.
சூரியனை நோக்கி கைகளை உயர்த்தியும் கொடியை அசைத்தும் வழிபாடு செய்தனர் .தொடர்ந்து தங்களது பாரம்பரிய நடனம் ஆடினர்.






