அரிய புகைப்படத்தை எடுத்த புகைப்பட கலைஞர்..!
நிலவை சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் கடக்கும் அரிய புகைப்படத்தை புகைப்பட கலைஞர் ஆர்டோ மெக்கார்டி தனது தொலைநோக்கி மூலம் படம் பிடித்துள்ளார். கலிபோர்னியாவை சேர்ந்த ஆண்ட்ரூ மெக்கார்டி வானியல் அதிசயங்களை புகைப்படம் எடுப்பதில் கைதேர்ந்தவர்.
இந்த நிலையில் பூமியிலிருந்து 400 கிலோ மீட்டர் தொலைவிற்கு அப்பால் நடந்த நிகழ்வு படம் பிடிக்கப்பட்டுள்ளது. அந்த புகைப்படத்தில் விண்வெளியில் மிதக்கும் சர்வதேச விண்வெளி நிலையமானது நிலவுக்கு குறுக்கே சிறு துரும்பு போல நகரும் அரிய காட்சிகள் இடம் பெற்றுள்ளன.







