சசிகலாவை வரவேற்று சுவரொட்டி ஒட்டியவர் அதிமுகவில் இருந்து நீக்கம்..!
சிறையிலிருந்து வெளியான சசிகலாவை வரவேற்று நெல்லையில் சுவரொட்டிகள் ஒட்டிய நெல்லை மாநகர் மாவட்ட எம்ஜிஆர் மாவட்ட இணைச் செயலாளர் சுப்பிரமணி ராஜா அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
கர்நாடகா சிறையில் இருந்து சசிகலா விடுதலை ஆகியிருக்கும் நிலையில் அவரை வரவேற்று நெல்லை மாநகர மாவட்ட இணைச்செயலாளர் சுப்பிரமணிய ராஜா சுவரொட்டிகளை ஒட்டி இருந்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா என்று குறிப்பிட்டிருந்தார் இதனையடுத்து அவரை அதிமுகவிலிருந்து நீக்கி கட்சியின் தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.






