நிறுத்தி வைக்கப்பட்ட விமானம் உணவகமாக மாற்றப்பட்டுள்ளது..!
சிங்கப்பூரில் கொரொனா கட்டுப்பாடுகளால் கலையிழந்து காணப்பட்ட விமான நிலையத்தில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள விமான உணவகத்தால் மக்கள் கூட்டம் அலைமோதியது. அந்நாட்டில் கொரொனா தடுப்பு நடவடிக்கையாக விமான போக்குவரத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதனால் பயன்பாடு இன்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விமானம் மூலம் வருமானம் ஈட்டவும், மக்களுக்கு புதிய அனுபவத்தை அளிக்கும் பொருட்டு ஏ3ஐடி ஜெட் உணவகமாக விமானம் மாற்றப்பட்டுள்ளது.






