--- --:--:-- --

காவல்துறையின் மிருகத்தனம் கொடூரமான குற்றம் – ராகுல் காந்தி ட்விட்டர் பதிவு!

6

சாத்தான்குளத்தில் போலீஸ் காவலில் தந்தை மகன் உயிரிழந்ததற்கு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர் காவல்துறையினர் தாக்குதல் நடத்துவது என்பது கொடூரமான குற்றம் என கூறியுள்ளார்.

 

பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள ராகுல்காந்தி மக்களை காக்க வேண்டிய காவலர்களே அத்து மீறியது வேதனையானது எனக் கூறியுள்ளார். மேலும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon