பழுதாகி நின்ற லாரி.. கரும்புகளை எடுத்த காட்டு யானை..!
ஈரோடு மாவட்டம் தேசிய நெடுஞ்சாலையில் பழுதாகி நின்ற லாரியில் இருந்த கரும்புகளை யானை ஒன்று தின்றது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் பகுதியில் இருந்து கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரி ஒன்று சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றது.
அப்பொழுது லாரி பழுதாகி சாலையில் நின்ற நிலையில் அந்த வழியாக வந்த காட்டு யானை ஒன்று லாரியில் இருந்த கரும்புகளை எடுத்தது. வெகு நேரம் சாலை நடுவே யானை சென்றதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





